Tuesday, August 2, 2022

பிடிக்காத விஷயம் Edited

 பிடிக்காத விஷயம்


விளையாட்டு போல கணவனுடன் சிங்கப்பூர் வந்து ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஓடிவிட்டன.முதன் முதலில் தன் சொந்த ஊரைவிட்டு வெளிநாடு வந்திருக்கிறாள்.தூய்மையான அழகான சுற்றுப்புறங்கள். வீட்டை விட்டு வெளியே வந்தாலே மனதில் உற்சாகம் பிறந்துவிடும் ல்லிதாவிற்கு.தற்போது பஸ்ஸுக்காக காத்திருக்கிறாள். அழகிய அகலமான அந்த சாலையில் வாகனங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.


இன்னும் ஆறு நிமிடங்களில  பஸ் வந்துவிடும்.உட்கார சீட் கிடைக்குமோ என்று ஐபோனில்transport app ல் பார்த்துக்கொண்டிருந்தாள் ல்லிதா.இருக்கைகள் இருக்கின்றன என்று அது பச்சை வண்ணம் காட்டியது.


பஸ் ஸ்டான்டிலும் அதிக கூட்டம் இல்லை.வெயில் சுரீரென்றது.

முகத்தில் அணிந்திருந்த முக்கவசத்தால் மூச்சு காற்று மூக்குக் கண்ணாடியில் பனிபோல படிந்து எதையும் பார்க்க முடியாமல் தொந்தரவுசெயத்து.


கைக்குட்டையை எடுத்து கண்ணாடியை கழட்டி வியர்வை சூழ்ந்த கண்களையும் பிறகு கண்ணாடியையும நன்கு தொடைத்துவிட்டு மீண்டும் அணிந்து கொண்டாள்.அப்பாடா என்று வந்த பெருமூச்சை  மீண்டும் கண்ணாடியை  

கழட்டவேண்டியதாகிவிடுமோ என்ற பயத்தில் மெதுவான மூச்சாக மாற்றினாள்.


பஸ் வந்துவிட்டது.கூட்டமேயில்லை.கையிலிருந்த கார்டை டேப் செயதுவிட்டு காலியாக இருந்த பஸ்ஸிற்குள வசதியாகஜன்னலிலிருந்து வெயில் படாத இடமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு உட்கார்ந்து ஏசியை முகத்திற்கு நேராக படும்படி திருப்பிவிட்டுஉட்காரவும் பஸ் அடுத்த ஸ்டாப்பிற்கே வந்துவிட்டது.



இங்கும் கூட்டம் இல்லை.யாரோ இருவர் ஏறினர்.அதில் ஒருத்திதான் பாகீரதி.

இவளைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தாள்.கையிலிருந்த காய்கறி பைகளை காலடியில் வைத்துவிட்டு புன்னகையுடன் பக்கத்தில்உட்கார்ந்து கொண்டாள்.


என்ன எப்படி இருக்க” ல்லிதாவின் புன்னகையை மாஸ்கையும் தாண்டி அவள் மலர்ந்த கண்கள் காட்டிக் கொடுத்தன.


“ நல்லா இருக்கேன்டீ.பாரு நாம ரெண்டு பேரும் பக்கத்து பக்கத்து ப்லாக்ல இருக்கோம் ஆனா

ஒரு மாசத்துக்கு மேல ஆகுது பாத்துஆமாம் நீ எப்படி இருக்க.பட்டுப்

புடவை கட்டி இருக்கயே எதாவது விசேஷமா எங்க  போயிட்டு வர?ஆமாம்

எதோ ஊர்ல வீடு வித்துட்டு அமெரிக்கால உன் பையனோடவே செட்டிலாகறேனு சொன்னியே.என்னாச்சு” என்று கேள்வி மேல்கேள்வியாக அடுக்கினாள் வந்ததும் வராத்துமாக.


நான் நல்லா இருக்கேன்.இன்னிக்கு என் பையனோட நான்காவது வருட கல்யாண  நாள்.அதான் கோயிலுக்கு போயிட்டுவரேன்.அமெரிக்காவுக்கு வரச்சொல்லி கூப்பிட்டுக்கிட்டேதான் இருக்காங்க.

ஆனா வீடு விக்க எனக்குத் தான் இஷ்டமில்ல.எனக்கு வயசான காலத்துல நம்ம சொந்த ஊருக்கே போயிடனும்னுதன் ஆசை.

ஆனால் என் வீட்ல அவங்க எல்லாரும் ஒரே கட்சியா இருக்காங்க.நான் தான் பிடிவாதமா இருக்கேன்.

அந்த வீடு எங்களோட கனவு வீடு.பாத்து பாத்து கட்டினோம்.டவுனல தான் இருக்கு.எதுக்கு விக்கனும்.

கொஞ்சநாள் பையன் கூட இருந்துட்டு மறுபடியும் சொந்த ஊருக்கே வந்து வாழனும்னு ஆசையா இருக்கு.”

ல்லிதாவின் குரலில் ஏக்கம் தெரிந்தது.


அடுத்தடுத்த ஸ்டாப்பில் கூட்டமாக நிறையபேர் வந்து ஏறியதால் இவர்கள் பேசுவதை சற்று குறைத்துவிட்டு வேடிக்கை பார்த்தனர்.பிறகு


எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.ஆனா வயசான காலத்துல பசங்க கூட இருக்கர்துதான் நல்லது.

நீங்க இங்க இருக்கும்போதே வீட்டை வித்துட்டா.உன் பிள்ளைக்கும் அலைச்சலா இருக்காதுனு நினைக்கறாங்களோஎன்னவோ?.எல்லாம் தெரிஞ்ச நீ பிடிவாதம் பிடிக்கர்துதான் எனக்குப் புரியலடீ” என்றாள் பாகீரதி உரிமையுடன்.


என் பையனோட முதல் பிறந்த நாள் அன்னிக்குதான் வீட்டை ரிஜிஸ்டர் பண்ணோம்.என்னை பொறுத்தவரைக்கும் அந்த வீடுஎன்னோட ரெண்டாவது குழந்தைரொம்ப ராசியான வீடு.   என்றாள் ல்லிதா.


ல்லிதா அந்த வீட்டை எவ்வளவு நேசிக்கிறாள் என்பது புரிந்தது.அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவள் முகத்தில் ஓடும் கவலைரேகைகளை இரக்கத்துடன் பார்த்தாள்.


பிறகு “ ல்லிதா நாம குடும்பத்துக்காக எவ்வளவோ தியாகம் பண்றோம்.எதுக்காக கவலப்படற

தப்பா நினைக்கலன்னா நான் ஒண்ணு சொல்லவா?” தயக்கத்துடன் சொல்லிவிட்டு நிறுத்தினாள் பாகீரதி.


சொல்லு” என்றாள் ல்லிதா


உனக்கு நல்லா தெரியும் எங்க வீட்டுக்கார்ர் பேங்க்ல வேல பாக்கறார்னு.அவருக்கோ ஊர் ஊரா மாத்தலாயிட்டேஇருக்கும்.ஆரம்பத்துல ஜாலியா இருந்துது.போக போக ஒரே இடத்தில வேல இருந்தா நமக்குனு நாலு பேர் தெரிஞ்சவங்கஇருப்பாங்க.இப்படி நாடோடி வாழ்க்கையா போச்சேனு ஒரே வருத்தமா போச்சு.ஆனா வேற வழி இல்ல.அதனால

்சசீ ்சீ இந்தப் பழம் புளிக்கும்னு கதைல வருமே அந்த மாதிரி .ஒரு இடத்துலந்து மாத்தலாகும்போது அங்க இருக்க பிடிக்காதவிஷயத்தை மட்டுமே அடிக்கடி நினைச்சுப்பேன்.

ஒரு வேளை உனக்கும் நீ வாங்கின வீட்டுல எதாவது பிடிக்காத விஷயம் இருந்தா அதையே நினைச்சிப்பாரு

என்றாள்  பாகீரதிஇருவரும் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால் கூட்டத்தை விலக்கிக் கொண்டு பஸ்ஸிலிருந்து இறங்கினர்.


எதுவுமே பேசாமல் யோசனையாக நடந்த ல்லிதாவை பேச்சுக் கொடுத்து தொந்தரவு செய்யாமல் பின் தொடர்ந்தாள் பாகீரதி.


முதலில் ல்லிதாவின் அபார்ட்மென்ட் வந்ததும் திரும்பி பார்த்தாள் ல்லிதா.பாகீரதி அவளுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

நீ சொல்றதும் சரிதான் யோசித்து பாக்கறேன்” என்றாள்.


நிம்மதி பெருமூச்சு விட்ட பாகீரதி “அப்போ நான் கிளம்பறேன் ல்லிதா” என்று சொல்லிவிட்டு புன்னகையுடன் வீட்டை நோக்கிநடந்தாள்.ல்லிதாவுக்கு அன்றிரவு  ஒரே யோசனைதான்.


ஒரே பையனான தன் கணவருடன் வாழ்க்கையை துவங்கிய போது 450 சதுர அடியில்  இருந்த வாடகை வீட்டைப் பற்றிநினைத்தாள்.

ஒரு படுக்கை அறை கொஞ்சம் பெரிய ஹால் சின்ன சமையலறை.அதை அடுத்த சின்ன பால்கனி.

கிச்சனுக்கும் பெட்ரூமுக்கும் நடுவே குளியலறையும் கழிப்பறையும் இணைந்து ஒரே ரூமாக இருக்கும்.

மாமனார் மாமியார் ஹாலில் இருந்தாலும் அவர்களுடைய சிறிய பீரோ ல்லிதாவீட்டில் கொடுத்த பெரிய பீரோ இரண்டும் பெட்ரூமில்ஆக்கரமிப்பு செய்து கொண்டிருந்ததால் கட்டில் போட இடமில்லாதல் மெத்தையை தரையில் விரித்து தான் படுக்கமுடியும்.



ஹாலில் மட்டுமென்ன ஒரு ஓரத்தில் மாமனார் பெரிய பூஜை அலமாரியை வைத்திருப்பார்.

எதிர் பக்கத்தில் டீவி ஸ்டான்டில் டீவி,பக்கத்தில் டெலிபோன்,ஒரு பக்கம் சோபா அதற்கு பக்கத்தில் யாராவது வந்தால்உபயோகப்படுத்த சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மடக்குநாற்காலிகள்.கதவுக்கு பின்னால் செருப்பு ஸ்டான்ட்.

இவற்றுக்கு நடுவில் இருக்கும் இடத்தில்   தான் தரையில் அமர்ந்து சாப்பிடவும் இரவில்  மாமியார் மாமனார்  உறங்கவும்  வேண்டும்.


காலை ஐந்து மணிக்கு தண்ணீர் வரும்.பிறகு வராது.அப்போதே எழுந்து   பெரிய டப்புகளில் மாமியாரும் மாமனாரும் தண்ணீர்பிடிப்பார்கள்.


அப்பாடி எவ்வளவு கஷ்டம்?

ஆனால் ல்லிதாவும் வேலைக்குப் போவதற்கு பஸ் ஸ்டாப்  ரெயில்வே ஸ்டேஷன் எல்லாமே பக்கம் தான்.அதுதான் முக்கியமாகதெரிந்தது.


கல்யாணத்திற்கு முன்பே ல்லிதா அப்பா இல்லை.சொந்த மாமா மகனைத் தான் திருமணம் செய்திருந்தாள்.


பாகீரதியின் அம்மாவிற்கு கிராமத்தில் பெரிய வீடு இருந்தது.இரண்டு அண்ணன்கள் இருந்ததால் தன் சம்பளமே போதும் என்று பிறந்தவீட்டு சொத்துக்கு ல்லிதா ஆசைப்படவில்லை.

 

மாமாவும் மாமியும் ரொம்ப விருப்பப்பட்டு தன் ஒரே பிள்ளைக்கு எந்த சீதனமும் எதிர்பார்க்காமல் கல்யாண செலவுகூட அவர்களேசெய்தார்கள்.இவர்களுக்காக கடைசிவரை கூடவே இருந்து காப்பாற்றவேண்டும் என்று மனதில் ல்லிதா உறுதி எடுத்திருந்தாள்.ஆனால்அவளுக்கு அந்த விஷயத்தில் கூட அனுசரனையாகத்தான் இருந்தனர்.

Plus two முடித்துவிட்டு மேற்படிப்பிற்காக  வெளிநாடு கிளம்பிய பேரன் அங்கேயே வேலை வாங்கி விட்டான்.அதனால் தாத்தாவே  வரன்பார்த்து அவனுக்கு 

திருமணம் செய்துவைத்துவிட்டு  மீண்டும் வெளிநாட்டிற்கே இருவரையும் அனுப்பிவிட்டு  கடமை முடிந்தது என்று நினைத்துவிட்டார்போல ஆறுமாத்திற்குள் ஒருவர் பின் ஒருவராக மாமனாரும் மாமியாரும் இறைவனடி சேர்ந்தஉவிட்டார்கள் என்பதெல்லாம் பிறகு  நடந்தவிஷயங்கள்.


அந்த 450 சதுர அடி வீட்டின்  எல்லாம் கஷ்டமும் ஆறுமாதங்களில் தலைகீழாக மாறிவிட்டது.லலிதாவின் வயிற்றில் மகேஷ் இருப்பதுகரன்பர்ம் ஆனதிலிருந்து ஒவ்வொரு மாதமும் அதிசயங்கிள் நடக்க ஆரம்பித்தன்.

மூன்றாவது மாதம் பதவி உயர்வு  ஐந்தாவது மாதம் பிரபல கம்பெனியிலிருந்து எதிர்பாராத அழைப்பு வந்தது.

பெரய சம்பளம்  பல நாடுகளுக்கு பயணம்அடிக்கடி வருடக் கணக்கில் அங்கு தங்கி வேலை செய்ய வேண்டிய நிலை  என்றுல்லிதாவின் கணவர் உயர்ந்து கொண்டே போக ல்லிதாவும் பளபளவென்று தோற்றம்அளிக்க ஆரம்பித்தாள்.


அக்கம்பக்கம் இருப்பவர்கள் ல்லிதாவினவயிற்றில் இருப்பது மகாலஷ்மிதான் பெண்  குழந்தை தான் பிறக்கும் என்றார்கள்ஆனால்மிக அழகிய ஆண் குழந்தையாக பிறந்த மகேஷைப் பார்த்து தாத்தாவும் பாட்டியும் அவனுக்கு  தினமும் திருஷ்டி சுற்ற ஆரம்பித்தனர்.


அதுவரை வசதியாகத் தெரிந்த 450 சதுரடி வீடு மகேஷ் தவழ ஆரம்பித்ததும் யோசிக்கவைத்தது.

வீடு வாங்கிடுப்பா “ என்றார் மாமனார்சொன்னதோடு மட்டும் இல்லாமல்  விடாப்பிடியாக  வீட்டு லோனில்  1500  சதுர அடியில்இரண்டு அடுக்காக இருந்த அழகிய தனி வீட்டை வாங்க வைத்தார்சரியாக மகேஷின் முதல் பிறந்த நாளன்று ரெஜஸ்ட்ரேஷன் முடிந்துவிட்டது.வாங்கிய பிறகும்  ரெனோவேஷன் செய்தார்கள்.


கீழே கார் பார்க்கும் அத்ற்குபின்னால்  ஆபிஸ் ஸ்பேஸ்   மாடியில் இரண்டு படுக்கையறை பெரிய சமையலறை பூஜை அறை மற்றும்ஹால் இரண்டு பால்கனி  இரண்டு குளியல் மற்றும் கழிப்பறைகள் என்று மிக அழகான அமைப்பான வீடு.

பக்கத்திலேயே பஸ் ஸ்டாப் ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே இருந்தது.


கிரகப்ரவேசத்திற்கு எல்லோரும் வந்திருந்தார்கள்.

அந்த  வீட்டின் கிரகப்ரவேசம் கலயாணம் போல நடந்தது.மகேஷ்அங்கே  விஐபியாக இருந்தான்.

சாப்பாடு கேட்டரிங் நடந்து கொண்டிருந்தது.குழந்தைகள் மாடிக்கும் கீழுக்குமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்பெரியவர்கள் ஹாலில்போடபட்டிருந்த மடக்கு நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தார்கள்.

 

ஒரு படுக்கை அறையில் தட்டுகளில் பட்சணங்கள் பழங்கள் தேங்காய்கள் தால்பூலப்பைகள் சென்டு சென்டாக் பூக்கள்  மீந்து போனமாவிலைகள் எல்லாம் இருந்தன.


இன்னோர் அறையில் வந்தவர்களின் சூட்கேசுகள் துணிகள் எல்லாம் இருந்தன்.


ஹோம்ம் குண்டத்தின் முன் இருந்த மணைகளில் ல்லிதா கணவனும் அமரந்திருக்க எதிரே மகேஷை மடியில் வைத்துக் மாமனாரும்மாமியாரும் வந்திருந்தவர்களுடன் உட்கார்ந்திருந்தார்கள்.


ஒருவழியாக ஹோம்ம் நல்ல படியாக முடிந்தது.

மாமியாரும் மாமனாரும் மகேஷை  ல்லிதா இடம் கொடுத்துவிட்டு  

வந்தவர்களை சாப்பிட வைக்கப் போய்விட்னர்.


வந்தவர்கள் அனைவரும் உறவினர்கள்தான் தன் சித்திகளே நாத்தனாராக அமைந்திருந்ததால்  ல்லிதா சகஜமாக குழந்தைக்கு சாதம்சிறிது பிசைந்து கொண்டு எங்கு ஊட்டுவது என்று புரியமல் மாடிப்படிக்கு வந்தாள் அ்அங்கே  அழுவது போலக் குரல் கேட்டது.பழகியகுரலாக அது இருந்ததால் எட்டிப் பார்த்தாள்.படிக்கட்டுக்கு முடிவில் சித்தி மகள்  தாரிணி  கண்களை துடைத்துக் கொண்டிருந்தாள்.

அவள் சுவற்றை ஒட்டி இருந்ததால் யாரிடம் பேசுகிறாள் என்று தெரியவில்லை.

உலகத்துலயே உன்னதான் மாமா எனக்கு  ரொம்ப பிடிக்கும்காலேஜ் முடிச்சதும் அப்பா அம்மாகிட்ட சொல்லலாம்னுஇருந்தேன்.அதனால் தான் உன் கல்யாணத்துக்கு கூட நான் வரல மாமா” என்ற அழுது கொண்டே கேட்டதும்

ல்லிதா சீரியசாக கவனித்தாள்.

“ அழாத தாரிணி எல்லாம் விதிஅத்தை பொண்ணுங்க்ளல உனக்கு பிடிச்சவ யாருனு கேட்டிருந்தா  உன் பேரதான் சொல்லிர்ப்பேன்எங்கிட்ட ஒரு வாரத்த கூட கேக்காம  அவங்களே ல்லிதாவ முடிவு பண்ணிட்டாங்கஇல்லனா இவளயெல்லாம் யார்கட்டுவா?“

தன் கணவனின் கரகரத்த குரலை கேட்டு திடுக்கிட்டாள் ல்லிதா.அவள் கண்கள் குளமானதுமனதை ஏதோ பாரமாக அழுத்தியது.தலைசுற்றியது.

அப்பாவின் குரலைக் கேட்டுவிட்ட  மகிழ்ச்சியில்

அப்பா” என்று மகேஷ் அழைத்துவிட்டான்.குரலைக் கேட்டதும் மாடியில் நின்ற  ல்லிதாவை  கவனிக்காத   தாரிணி  அவனுடையகைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு  அங்கிருந்து வேகமாக ஓடிவிட்டாள்தன் மனைவி கவனித்துவிட்டதை அறியாதகணவன் அப்போதுதான் அவள் அங்கே வந்திருப்பதாக நினைத்து விட்டான்.

மாடியேறிவந்து மகேஷை தன் கைகளில் வாங்கினான்அவன் கன்னங்களில் முத்தம் கொடுத்துக் கொண்டே

“ எப்படி சொன்ன அப்பா.. இன்னொரு தடவ சொல்லு அப்பா… சொல்லு” என்று  குழந்தையைக்  கொஞ்சினான்.

ல்லிதா கணவன் பார்க்காத படி கண்ணீரை  துடைத்துக் கொண்டாள்தன்னை அன்பாக நல்லமுறையில் நடத்தும் மாமா மாமியைப்பற்றி  நினைத்துப் பார்த்தாள்.

அந்தப் பக்கமாக போன தாரிணியை கவனிக்காதவன் போல மகனைச் சாப்பிட வைக்க அக்கறையுடன் ஓடிஓடி வந்து விளையாட்டுக்காட்டும் தன் கணவனையும் கவனித்தாள்தாரிணி கிளம்பும் வரை மகேஷ் தன் கணவனுடனேயே  இருக்கும்படி பார்ததுக் கொண்டாள்இதைப் பற்றியெல்லாம்   கணவனிடம்  எதுவுமே விசாரிக்க அவள் விரும்பவில்லை

மகேஷ்  தந்தையை மாற்றிவிடுவான்   என்ற நம்பிக்கையில்  அந்த விஷயத்தை மறந்தே  போய்விட்டாள் ல்லிதா.


இப்போது மீண்டும் அதெல்லாம்  நினைவிற்கு வந்ததும் தூக்கம் வராமல் புரண்டாள்.

காலையில் எழுந்ததும்  சரிங்க அந்த வீட்டை வித்துட்டு அமெரிக்காவே போயிடலாம்” என்றாள் கணவனிடம்.

காலங்காத்தால இந்த நல்ல சேதி சொல்லிர்க்க.மகனும் மருமகளும் தூங்கிட்ருப்பாங்க.இன்னிக்கு இராத்திரியே போன் பண்ணிசொல்லிடறேன்.ஆமாம் நேத்து வர விக்கவேணாம்னு சொன்ன ஆனா எப்படி ஒரு இராத்திரில முடிவு பண்ண?.” என்றார் ஆர்வமாக

அந்த வீட்டு  கிரகப்ரவேசத்தை நினைச்சேன் .

மகனோட இருக்கர்து தான் உங்களுக்கு  ரொம்ப  பிடிச்ச விஷயம்னு எனக்கு புரிஞ்சிது அதான்” என்ற மனைவியை புதிராகப் பார்த்தார்கணவர்.



No comments:

Post a Comment