Wednesday, April 4, 2018

சிற்பி

ஞாயிற்றுக்கிழமை காலை...

ஆறாம் வகுப்பு படிக்கும் காவ்யாவை... "காவ்யாகோயிலுக்கு போகலாமா?" அம்மாவின் கனிவான அழைப்பிற்கு "வேண்டாம்மா எனக்கு அங்கே போரடிக்கும்..." காவ்யாவின் பதில் எப்போதும் போல் ஒலிக்க சற்றும் மனம் தளராது அம்மாவும்

"காவ்யா அப்பா வெளிநாட்டில் இருக்காங்கல்ல? போன வாரம் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போன போது சீக்கிரம் குணமாகனும்னு கோயிலுக்கு வேண்டிக்கிட்டேன்மா.... 
வேண்டுதலை நிறைவேத்தலன்னா சாமி குத்தம் ஆகிடும்..."

காவ்யாவிற்கு காலை உணவை கொடுத்துவிட்டு தான் மட்டும் விரதமாக கிளம்பினாள் அம்மா...

வேண்டா வெறுப்பாக காவ்யா அம்மாவுடன் கோயிலுக்கு வந்தாள்...

கோயிலில் கூட காவ்யா பொறுமையே இல்லாமல் தான் நடந்து கொண்டாள்...

"போகலாம்மா  போராடிக்கிது...என்று அம்மாவை அவசரபடுத்தினாள் காவ்யா...

கோயிலில் பிரசாதம் கூட வாங்கிக்கொள்ளாமல் தாயும் மகளும் வெளியேறினார்கள்...

சிற்பி சிலையை  செதுக்குவது போல் குடும்ப சூழ்நிலைக்கு  ஏற்ப   ஒத்துழைக்காத  காவ்யாவிடம் உள்ள குறையை களைவது தன் கடமை என்று மனதில் எண்ணிக் கொண்டாள் அம்மா...

வரும் வழியில் காவ்யாவின் தோழி எதிர்பட்டாள்காவ்யாவிற்கு உற்சாகம் வந்து விட்டதுஅவள் தோழி தனியாக வந்திருந்தாள்.
"நான் அவளுடன் சற்று நேரம் பேசிவிட்டு வரட்டுமா?"   என்று அம்மாவிடம் கெஞ்சிக்கேட்டாள் காவ்யா...

"நான் காலை உணவு உண்ணவில்லை எனக்கு மிகவும் சோர்வாக இருக்கின்றதுஆனாலும் உன்னுடைய சந்தோஷத்திறகாக 
என் துன்பங்களை பொறுத்துக் கொண்டு சற்று நேரம் இங்கே காத்திருக்கிறேன்... உன் தோழியுடன் சந்தோஷமாக பேசிக்கொள்."

என்று பொறுமையாக கூறிவிட்டு பக்கத்திலிருந்த பேருந்து நிலைய திண்ணையில் அமர்ந்த அம்மாவை பார்த்த காவ்யா மனம் திருந்தி
"என்ன  பத்தி மட்டுமே சிந்திச்ச  என்னை மன்னிச்சிடுங்கம்மா... வீட்டுக்கு போகலாம்மா..."  என்று  சொல்லி தாயின் கைகளை பிடித்தவாறே தோழியிடம்  "இன்னொரு நாள் நாம் சந்திச்சு  பேசலாம்"  என்றாள்...

No comments:

Post a Comment