பியூனின் குரல் வயிற்றில் புளியை கரைக்க, அந்த ஏசி அறையிலும் வியர்த்து கொட்டியது சீதாராமனுக்கு...
சென்ற வாரம் MD-க்கு தெரியாமல் கடனாக வட்டிக்கு கொடுத்த அலுவலக பணம் இன்னும் திரும்ப கிடைக்காததால்...
"வாங்க சீதாராமன் உட்காருங்க, இந்த மாசம் அக்கவுண்டஸ் டேலி ஆகிவிட்டதா?", MD கேட்க...
"சார்.... வந்து..... ஒரு 15 ஆயிரம்... "என்று சீதாராமன் முடிப்பதற்குள்...
"என் பர்த்டே பார்ட்டி செலவுகளையும் இதிலே சேத்திடுங்க..."என்ற
MD-இன் வார்த்தைகளால் தான் வட்டிக்கு கொடுத்த பணத்தையும் பர்த்டே செலவுகளில் சேர்த்து விடலாம் என்று மகிழ்ச்சியோடு இருக்கைக்கு திரும்பினார் சீதாராமன்.
வீட்டில்...
"பெரிய கம்பெணில அக்கவுண்டன்டோட பொண்ணுன்னு பேரு... என் பர்த்டேக்கு 300 ரூபாய்ல ஒரு சுடிதார் கூட கிடையாது... ",
அலுத்து கொண்ட சீதாராமனின் மகளை தலையை தடவி கொடுத்து...
"வாங்கிக்கோம்மா ... உங்க அப்பா என்னிடம் கணக்கு கேட்டா... இந்த மாசம் பாட்டி திதி வந்தது இல்ல,... அந்த கணக்குல இத சேத்துடறன்"' என்றாள் சீதாராமனின் மனைவி...
No comments:
Post a Comment